வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம்-திருச்சி மாநகராட்சி அறிவிப்பு 

வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம்-திருச்சி மாநகராட்சி அறிவிப்பு 

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதற்காக திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி பொதுமக்கள் போட்டுக்கொள்ள நாள்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பெண்களுக்கென சிறப்பு முகாம்கள் அவ்வபோது நடத்தப்படுகிறது. இதில் குறிப்பாக திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் படுக்கையில் உள்ளவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.

Covid-19 தடுப்பூசியை போட்டு கொள்ள +916385-269208 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி முன்பதிவின் போது தங்களை பற்றிய முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH