திருச்சி எஸ்ஆர்எம் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

திருச்சி  எஸ்ஆர்எம்  நர்சிங் கல்லூரி  மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படித்த செவிலியர்களுக்கு பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம் சென்னை ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மகப்பேறு கவுன்சில் பதிவாளர் டாக்டர் எஸ். ஆனி கிரேஸ் கலைமதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 20 மாணவர்களுக்கு சிறப்பு விருதும், முதுகலையில் 16 பேருக்கும், 93 செவிலியர் மாணவிகளுக்கு இளங்கலை பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் சென்னை ராமாபுரம் & திருச்சி வளாக துணை தலைவர் எஸ்.நிரஞ்சன், தலைமை இயக்குநர் டாக்டர் சேதுராமன், திருச்சி வளாக இயக்குநர் டாக்டர் என்.மால் முருகன், துணை இயக்குநர் டாக்டர் என். பாலசுப்ரமணியன், திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் டீன் டாக்டர் எஸ்.ரேவதி மற்றும் துறைத் தலைவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் க லந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision