திருச்சி அருகே டயர் கடையில் 2.50 இலட்சம் மதிப்புள்ள டயர்கள் திருட்டு!

திருச்சி அருகே டயர் கடையில் 2.50 இலட்சம் மதிப்புள்ள டயர்கள் திருட்டு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பூட்டி சென்ற கடையில் இரவோடு இரவாக இரண்டரை லட்சம் டயர்களை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி முஸ்லிம் நடுத்தெருவில் வசிப்பவர் பஷீர் அகமது (54). இவர் துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே டயர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு நேற்று காலை கடையில் சென்று பார்த்த போது டயர்கள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisement

இரண்டரை லட்சம் மதிப்புள்ள டயர்கள் காணாமல் போயுள்ளது கண்டு துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.