திருச்சியில் கொரோனாவை வென்ற 26 வயது இளைஞர்!!

திருச்சியில் கொரோனாவை வென்ற 26 வயது இளைஞர்!!

துபாயிலிருந்து கடந்த மாதம் 22ம் தேதி திருச்சி வந்த ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அவர் குணமடைந்துள்ளதால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை முதல்வர் வனிதா தலைமையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு தேவையான பழங்கள் முட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டு அனுப்பி வைத்தனர்