திருச்சியில் புதுடிரெண்ட் சாகசம் செய்து பெண்களை கவரும் இளைஞர் ஆண்களை கலாய்க்கும் மாணவி

திருச்சியில் புதுடிரெண்ட்  சாகசம் செய்து பெண்களை கவரும் இளைஞர் ஆண்களை கலாய்க்கும் மாணவி

இன்றைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் தங்களை பிரபலமாக்கி கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது இதற்காக லைக் பாலோவர்களை பெறுவதற்காக தவறான பல செயல்களையும் செய்து வருகின்றனர்.

திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் மாணவி ஒருவரும் மாணவரும் புதிய ட்ரெண்டிங்கை உருவாக்கி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களை கலாய்ப்பது சாலையில் செல்லும் பேருந்தை நிறுத்தி ஏறாமல் இருப்பது என ஒரு மாணவி வீடியோவை பதிவு செய்து இன்ஸ்டா ரிலீஸ் செய்து பாலோவர்ஸை கவர்ந்து வருகிறார்.

மற்றொருவர் பெண்களை கவர்வதற்காக பெண்கள் கூடும் பகுதிகளான சத்திரம் பேருந்து நிலையம், கோட்டை வாசல், காட்டூர் கல்லூரி வாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஆண் ஒருவர் சாகசம் செய்து பெண்கள் அதை பார்த்து சிரிப்பது போல் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு வருகிறார்.. 

பள்ளி கல்லூரிகள் நிகழ்ச்சிகளில் இது போன்ற சாகச நிகழ்ச்சிகளை உள்அரங்கில் செய்வது யாரையும் பாதிக்காது. பொது இடங்களில் பேருந்து நிலையம் மக்கள் அதிகமாக வரும் பகுதியில் இது போன்று சாலைகளில் சாகசங்களை செய்வதும் மற்றவர்களை கலாய்ப்பதும் இவர்கள் பதிவு செய்து வெளியிடுவது தொடருமேயானால் அதிகமானோர் இது போன்ற செயல்களில் ஈடுபட துவங்கி விடுவார்கள்.

இந்நிகழ்வுகளை தடுக்க மாவட்ட, மாநகர காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision