பிளாஸ்டிக் இல்லாமல் மஞ்சள் பை வளாகமாக மாற்றுவதற்கு ரூபாய் பத்து லட்சம் பரிசு அறிவிப்பு

"மீண்டும் மஞ்சள் பை" பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் 2024-2025 நிதியாண்டில் மஞ்சள் பை விருது சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளை மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிகளுக்கு மாற்றுதல் பயன்படுத்துவதை ஊக்குவித்து
மஞ்சள் பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த மூன்று பள்ளிகள் மூன்று கல்லூரிகள் மற்றும் ஒரு வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும் முதல் பரிசு ரூபாய் 10 லட்சம் இரண்டாம் பரிசு ரூபாய் 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக மூன்று லட்சம் வழங்கப்படும் இந்த அறிவிப்பின்படி தமிழ்நாட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் டிஎன்பிசிபி ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை
அமல்படுத்துவதற்கும் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாற்றுவதற்கும் முன்மாதிரியாக பங்களிப்பை செய்த பள்ளிகள் கல்லூரிகள் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சள் பை விருதுகள் வழங்க முன்மொழிகிறது விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் தமிழ்நாட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் விண்ணப்பங்கள் அனைத்தும் இணைப்புகளிலும் தனிநபர் அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும் விண்ணப்பங்கள் மென் நகலுடன் இரண்டு அச்சு பிரதிகள் மாவட்ட ஆட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் தமிழ்நாடு மஞ்சள் பை விருது 2024க்கு விண்ணப்பிக்க சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி(1.05 2025) இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision