திருச்சி மாவட்டத்தில் நாளை (07.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (07.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் கல்லக்குடி 110/22-11KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (07.08.2024) புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 16:00 மணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய் சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழந்தலைப்பூர். கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர்,

வி.சி.புரம் கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம் ஆலம்பாக்கம், விரகாலூர். ஆ.மேட்டூர். நத்தம் , திருமாங்குடி, T.கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம் செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்குதலும் & காத்தலும் திருச்சி லால்குடி வட்டம் செயற்பொறியாளர் பொறிஞர். அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision