முசிறி- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி:அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

முசிறி- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி:அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

  முசிறி -- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ நீளத்திற்கு ரூபாய் 184.15 கோடி மதிப்பீட்டிலான தார்ச்சாலை அமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்நேரு  இன்று (30.9.22)முசிறி-தொட்டியம் சாலையில் கொக்கு வெட்டியான் கோவில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் எஸ்.சேதுபதி, உதவி செயற்பொறியாளர் வி.ரவிக்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் சே.கிருஷ்ணவேணி, மாலா இராமச்சந்திரன், ச.துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO