அரசு மரியாதையுடன் பெண்ணின் உடல் தகனம்

அரசு மரியாதையுடன் பெண்ணின் உடல் தகனம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த தழுகை ஊராட்சி டி.பாதர்பேட்டை மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த வர் ரமேஷ் (54). இவரது மனைவி ராணி (48). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த 9-ந் தேதி ராணி உடல் நலக் குறைவு காரணமாக துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது, ஓ கிருஷ்ணாபுரம் பிரிவு சாலை அருகே நிலைதடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த ராணியை சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தாரின் அனுமதியின் பேரில் ராணியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான டி. பாதர்பேட்டையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக துறையூர் தாசில்தார் வனஜா, உதவி தாசில்தார் செந்தில்குமார், உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர் குமரேசன், செபாஸ்டின், சந்தியாகு ஆகியோர் மரியாதை செலுத்தினர். இறந்த ராணியின் மகள்களான ரம்யா, ரஞ்சிதா, ரத்னா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகள் ரதிபிரியா இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision