கொரோனா நிவாரண பணிகளுக்காக 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யமொழி வழங்கினார்

கொரோனா நிவாரண பணிகளுக்காக 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யமொழி வழங்கினார்

கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 15 லட்சம், புதுக்கோட்டை நிஜாம் பாக்கு நிறுவனத்தின் சார்பில் 15 லட்சம் , ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பொறியாளர்கள் சார்பில் ரூபாய் ஒரு லட்சம்

என மொத்தம் 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் பள்ளி கல்வி துறை சார்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS