திருச்சியில் பூட்டிய வீட்டிற்குள் சென்று மர்ம நபர்கள் கைவரிசை!! நகை மற்றும் பணம் கொள்ளை!!

திருச்சியில் பூட்டிய வீட்டிற்குள் சென்று மர்ம நபர்கள் கைவரிசை!! நகை மற்றும் பணம் கொள்ளை!!

திருச்சி பீமநகாில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபா்கள் நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

This image has an empty alt attribute; its file name is IMG-20200702-WA0016-300x138.jpg

திருச்சி பீமநகா் பகுதியில் வசித்து வருபவா் தருண்குமாா். தண்ணீா் விநியோக வாகன ஓட்டுனராக வேலை செய்து வரும் இவாின் தந்தை கடந்த ஞாயிறு அன்று காலமானாா். இதனால் அவா் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி ஜெயந்தியுடன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கிற்காக காட்டூா் சென்றுள்ளாா். இன்று காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்த அவருக்கு மற்றொரு அதிா்ச்சி காத்திருந்தது.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2020-06-30-at-5.10.14-PM-236x300.jpeg
Advertisement

வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளாா். போலீசாா் நடத்திய விசாரணையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் பணம், 2 ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டுள்ளது தொியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.