கொலை வெறி தாக்குதல் - இந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கொலை வெறி தாக்குதல் - இந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் மீது தொடர்ந்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபடும் சிஐடியு அமைப்பினர்கள் மீது முறையாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டு என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமயபுரம் இந்து ஆட்டோ முன்னணி முருகேசன், சமயபுரம் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சரவணன், பெட்டவாய்த்தலை ஒன்றிய தலைவர் சாந்தகுமார், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், திருச்சி மண்டல் செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

திருச்சி கோட்ட பொதுச் செயலாளர் குணசேகர் கண்டன உரையாற்றினார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகாணந்தம் எழுச்சியுரையாற்றினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision