கட்சித் தலைமைக்கு துரோகம் செய்பவர்களை நடவடிக்கை எடுக்காவிட்டால் புற்றுநோய் போல் இயக்கத்தை அழித்துவிடும் -திருச்சி எம்.பி

கட்சித் தலைமைக்கு துரோகம் செய்பவர்களை நடவடிக்கை எடுக்காவிட்டால் புற்றுநோய் போல் இயக்கத்தை அழித்துவிடும் -திருச்சி எம்.பி துரை வைகோ பேட்டி:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்பட்டு வருகிறார்.ஒரு கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளை தீர்க்க அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் கூறுவதை கட்சி தலைமை கேட்க வேண்டும் அதே போல கட்சி தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இல்லையென்றால் அது புற்றுநோய் போல் பரவி இயக்கத்தையே அழித்து விடும்.நாங்கள் திமுக கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். கூட்டணிக்குள் எந்த வித குழப்பத்தையும்
ஏற்படுத்தாத வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும். ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒட்டிய போஸ்டருக்கு அக்கட்சியின் தலைவரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision