கருங்குளம் ஜல்லிக்கட்டு - 600 காளைகள், 300 காளையர்கள்

கருங்குளம் ஜல்லிக்கட்டு - 600 காளைகள், 300 காளையர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் தேவாலயத் திடலில் அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியில் 600-க்கும் காளைகளும், 300 காளையர்களும் களமிறக்கப்படுகின்றனர். 

தேவாலயத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் காளைகள் ஒன்றின்பின் ஒன்றாக வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டு வருகிறது. போட்டியினை திருச்சி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் போட்டியை துவக்கி வைத்தார். 

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த மாட்டிற்கு பிரிட்ஜ், சிறந்த மாடுபிடி வீரருக்கு வாஷிங் மிஷன் வழங்கப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn