500 ஆண்டுகள் பழமையான மெயின்கார்டு கேட் வளாக பராமரிப்பு பணி

500 ஆண்டுகள் பழமையான மெயின்கார்டு கேட் வளாக பராமரிப்பு பணி

கோட்டை வளாகத்தின் பிரதான நுழைவாயில்களில் பிரதான காவல் வாசல் ஒன்றாகும். பாறை கோட்டையின் சுற்றளவில் அதன் கோயில்கள், ஏரி, அரண்மனை மற்றும் பஜார் ஆகியவற்றைக் கொண்ட பெரிய கோட்டை சுவரில் இது அமைந்துள்ளது. பிரதான நுழைவாயில் வடக்கு நோக்கி உள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் திருச்சி மலைக்கோட்டை பகுதியிலுள்ள 500 ஆண்டுகள் பழமையான மெயின்கார்டு கேட் வளாகத்தை வலுப்படுத்த பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. ASI பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னத்தின் சமீபத்திய ஆய்வுகள் பெரிய விரிசல்கள் அடையாளம் காணப்பட்டதால் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அக்ரிஷன் சுவர் அகற்றப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் பெரிய பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதால் இந்த ஆண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. ASI உடன்   இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலை உணர்வு துறை ஒரு நில ஊடுருவாத ரேடார் கணக்கெடுப்பில் சுவரின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விரிசல்களை கண்டறிந்துள்ளனர்.

தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ASI  அதிகாரிகளுடன் சுவரை உயர்த்துவதற்கான காரணங்களை கண்டறிந்து ஆராய்ந்து வருகின்றோம். இந்த செயல்முறை ஒரு மாதத்திற்கு தொடரும். சுமார் 2,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கட்டமைப்பில் ஒரு வளைவு போன்ற திறப்பு உள்ளடக்கிய சுவரை ஓரளவு இடிப்பது மக்கள் மத்தியில் வதந்திகளை தூண்டியது.

எவ்வாறாயினும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த மாற்றி அமைக்கும் பணி என்று ASI தெளிவுபடுத்தி உள்ளது.

 பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தின் காலவரிசை மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் தகவல் பலகைகள் பொருத்தப்படும். அவசர கால பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத வகையில் பிரதான காவல் வாயில் சுவர்களில் ஏராளமான கடைகள் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் திருச்சி வட்டம் ASI மற்றும் திருச்சி மாநகராட்சி பழைமை வாய்ந்த  நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களில் நெறிமுறைகளை செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF