திருச்சி பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்

திருச்சி பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்

சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்(42). இவர் இன்று காலை மத்திய பேருந்து நிலையத்தில் கே.கே.நகர் பேருந்து நிறுத்தம் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நாகராஜ் பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn