காவிரி பாலத்தின் பராமரிப்பு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

காவிரி பாலத்தின் பராமரிப்பு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக் கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  இன்று (17.01.2023 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர்(க ம ப) புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn