திருச்சி மாநகராட்சிக்கு புதிய ஆணையர்

திருச்சி மாநகராட்சிக்கு புதிய ஆணையர்

திருச்சி மாநகராட்சி ஆணையராக முஜிபூர் ரகுமான் கடந்த 14.07.2021 ஆம் தேதி பதவியேற்றார். 9 மாதங்களாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்த இவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக தர்மபுரியில் திட்ட இயக்குனராக பணிபுரியும்  இளம்வயது வைத்தியநாதன் ஐஏஎஸ்  பதவியேற்கவுள்ளார்.

அனைத்து மாநகராட்சிகளிலும் ஐஏஎஸ் ஆக உள்ளவர்கள் மாநகராட்சி ஆணையராக பணியாற்ற தமிழக அரசு திட்டமிட்டு உத்தரவை பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில் புதிய ஆணையர் வைத்தியநாதன் ஐஏஎஸ் திருச்சி மாநகராட்சிக்கு ஒரிரு நாட்களில் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO