ஏஐடியுசி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் மனு!!

ஏஐடியுசி சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் மனு!!

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தபால் நிலையம் மூலமாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் தமிழக முதல்வர் அறிவித்தபடி ரேஷன் தொகுப்பு ரூபாய் 2000 நிதி உதவி உரிய பதிவு இருந்தும் கிடைக்காமல்  இன்னும் பல பேர்  உள்ளனர்.இந்த நிதியுதவி உடனடியாக கிடைக்க வேண்டுமென இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் மூலமாக ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.

Advertisement

இதில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் C.செல்வகுமார், பொதுச் செயலாளர் க.சுரேஷ்,  தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் M.R முருகன், மாவட்ட துணை தலைவர்  P துரைராஜ், மணப்பாறையில் மாவட்ட பொருளாளர் அருள் ஆரோக்கியம், வையம்பட்டி மாவட்ட துணைச் செயலாளர் ஓவியர் P.வீராச்சாமி லால்குடியில் மாவட்ட குழு உறுப்பினர் K.S இருதயசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கும் மனு அனுப்பப்பட்டது.