முதலமைச்சர் குறித்து நல்ல நோக்கத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் பேசினார் - திருச்சியில் விஜயபிரபாகரன் பேச்சு

முதலமைச்சர் குறித்து நல்ல நோக்கத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் பேசினார் - திருச்சியில் விஜயபிரபாகரன் பேச்சு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் செங்குறிச்சி ராஜேந்திரன் இல்ல காதணி விழா இன்று காலை திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்க்காக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார்.

அவருக்கு தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். காதணி விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜயபிரபாகரன்..... கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவர் எவ்வளவு கஷ்டப்படார் , அவருக்கு எவ்வளவு சேவைகளை எங்க அம்மா செய்தார் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் பிரேமலதா விஜயகாந்த் முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனை செல்ல கூறினார். ஆனால் அதை திமுகவினர் தவறாக எடுத்துக்கொண்டு எங்களுக்கு எதிராக பேசி அவதூறு பரப்பி வருகின்றனர்.

 முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் உடனடியாக மருத்துவம் பார்த்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் வந்து தனது முதல்வர் பணியை தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே பிரேமலதா விஜயகாந்த் அவ்வாறு பேசினார் என்றார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன், மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், முன்னாள் எம்.எல்ஏ செந்தில்குமார், அர்ஜுன்,

 பிரித்தா விஜய் ஆனந்த், மில்டன்குமார், ஜெயராமன், வாஞ்சி குமரவேல், திருப்பதி, வசந்த் பெரியசாமி, ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision