திருச்சி கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் ரயில்வே விரைவில் முடிக்கும் - எம்.பி. துரை வைகோ பேட்டி

திருச்சி கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் ரயில்வே விரைவில் முடிக்கும் - எம்.பி. துரை வைகோ பேட்டி

திருச்சியில், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில் பங்கேற்ற பின், திருச்சி எம்.பி., துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது.... திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம், காட்பாடி, திருவண்ணாமலை, வேலுார் வழியாக திருப்பதிக்கு ரயில் இயக்குவதற்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

திருச்சி– பெங்களூரு, திருச்சி– எர்ணாகுளம் ரயில்கள் இயக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளேன்.திருச்சி தொகுதியில் நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவெறும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை முதல் பிளாட்பாரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். புதுக்கோட்டை, கந்தவர்க்கோட்டை போன்ற இடங்களில் மிகவும் பின் தங்கிய பகுதியகள் இருப்பதால், தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை, கந்தர்வக் கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மூத்த குடிமக்கள் மற்றும் பத்திரியைாளர்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளேன்.திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரயில்களை நீட்டிப்பு செய்யும் போது, திருச்சி மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ரயில் இயக்கத்தை நீட்டிப்பு செய்யும் போது, ‘கோச்’களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அல்லது கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். விமான நிலையத்தில் ரன்வே விரிவுபடுத்துவதில் 90 சதவீதம் முடிந்து விட்டது.உறையூரில் இறந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நாட்டு வைத்தியம் செய்துள்ளனர். அதில் ஏற்பட்ட சிக்கலால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு இறந்துள்ளார்.

இதில், பல அரசியல் இருக்கு. எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு, தண்ணீர் மாதிரியின் சோதனை அறிக்கை வாயிலாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர்.திருச்சியில் மிக முக்கியமாக இரண்டு பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது ஒன்று கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பால பணிகள் மற்றொன்று ஜங்ஷன் அருகே நடைபெற்று வரும் மேம்பால பணி இந்த இரண்டும் ரயில்வே துறை முடிக்க வேண்டிய மேம்பால பணிகளை முடிக்காமல் தொடர்ந்து தாமதப்படுத்துகிறது இது தொடர்பாக ரயில்வே பொது மேலாளிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது முதலில் திருச்சி கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என தகவல் தெரிவித்துள்ளதாக எம்பி குறிப்பிட்டார்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அரசியல் பேச விரும்பவில்லைதொடர்ந்து, பயங்கரவாத தாக்குதல், திருச்சி உறையூர் பகுதி குடிநீர் பிரச்னை குறித்து கேட்டதற்கு, ‘மக்களுக்கு பயனுள்ள பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.இப்போது, நான் அரசியல் பேச விரும்பவில்லை. மக்கள் பணியில் கவனம் செலுத்த நினைக்கிறேன். உள் நாட்டு பயங்கரவாதிகளாக இருந்தாலும், கட்சிக்குள் இருக்கும் பயங்கரவாதிகளாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம்.

அரசியல் சார்ந்த வேறு ஒரு பேட்டியில், பத்திரிகையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். அரசியல் கட்சி சார்ந்த நான், வெளியில் இருக்கும் பிரச்னை, உள்ளே இருக்கும் பிரச்னை அனைத்துக்கும் வேறு ஒரு நாளில் பதில் சொல்கிறேன்,’ என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision