மத்திய மண்டலத்தில் ரூ.1,05,429 மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல்

மத்திய மண்டலத்தில் ரூ.1,05,429 மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் சந்தோஷ் குமார் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் மேற்பார்வையில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர்கள் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் தலைமையில் குட்கா மற்றும் புகையிலை சிறப்பு அதிரடி வேட்டை (16.06.2022) மற்றும் (17.06.2022 ஆகிய இரண்டு தேதிகளில் நடத்தப்பட்டது.

இதில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்து 0.645 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வழக்குகள் பதிவு செய்து 11.140 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும்,

கரூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து 52.0 78 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்து 9.919 கிலோகிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்தும், அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து 45.7 154 கிலோகிராம் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அளவு 149.536 கிலோ கிராம் மற்றும் அதன் மதிப்பு ரூபாய் 105429 ஆகும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO