புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 11 வரை சிறப்பு முகாம்கள்- மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 11 வரை சிறப்பு முகாம்கள்- மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து. மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவங்கப்பட்டது.

இதுவரை 2.3 மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் படதவித் தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைத்தளத்தில் https://www.puthumaipenn.tn.gov.inமுதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத் திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்துமாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள்

நடைபெறும். மாணவிகள் தவராமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மைதகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 2.3 மற்றும்4ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தின் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கதவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம், மேலும் mraheas@gmail.comஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல் படிப்பு /தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி திேக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்மண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தவைலர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO