ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாதர், தாயாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வஸ்திர மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.நாளை ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளிமாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து காட்சியளிப்பார்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது ஸ்ரீரங்கம் நம்பருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கி நாள்தோறும் பல்வேறுவாகனங்களில் நம்பெருமாள் திருவீதிஉலா நடைபெற்று வருகிறது.
அதன்படி சித்திரை தேரோட்டத்தையொட்டி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பருமாளுக்கும் பட்டுவஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கும், நாச்சியார்களுக்கும் பட்டுபுடவைகள், ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளிமாலை மற்றும் மங்களப்பொருட்கள் கொண்டுவந்திருந்தனர்.
இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் தலைமையில், ரமேஷ் மற்றும் கிருஷ்ணன் பட்டாச்சாரியார்கள், நிர்வாகிகள் எடுத்துவந்து, ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்களிடம் ஒப்படைத்தனர்.முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள், பழங்கள் மற்றும் பூக்கள் யாவும் கருட மண்டபத்தில் இருந்து திருக்கோயில் பிரகாரங்களில் வலம்வந்து பின்னர் மூலஸ்தானம் கொண்டுசெல்லப்பட்டது.
பின்னர் சித்திரை திருவிழாவில் 9 ஆம் நாளான, நாளைநடைபெறும் திருத்தேரோட்டத்தினபோது ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளிமாலை மற்றும் வஸ்திரங்களை நம்பெருமாளும் தாயாரும் அணிந்துகொண்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision