திருச்சி மாநகரில் இன்று 22.06.2021 மின் தடை பகுதிகள்

திருச்சி மாநகரில் இன்று 22.06.2021 மின் தடை பகுதிகள்

திருச்சியில் நகரியம் கோட்டத்திற்குட்பட்ட ஓடத்தெரு, காவேரி பாலம், மாயாஸ், சித்ரா ஹோட்டல் பகுதிகள், பழைய கரூர் பைபாஸ் ரோடு, மேலசிந்தாமணி, அண்ணாசிலை தெப்பக்குளம், நந்தி கோயில் தெரு, பெரிய மிளகுபாறை, பொன்னகர், பாரதியார் சாலை, விஸ்வாஸ் நகர், வசந்த நகர், குமரன் நகர், சீனிவாசன் நகர், வடக்கு ராமலிங்க நகர் முதல் தெரு, அண்ணாநகர் மேற்கு விஸ்தரிப்பு, பாத்திமா நகர் ரோடு, ஜாபர்ஷா தெரு,

சையது முதுர்ஷா பள்ளி,  மகளிர் சிறைச்சாலை, தில்லை நகர் கிழக்கு முதல் தெரு 4வது தெரு வரை, கோட்டை ஸ்டேஷன் ரோடு, அண்ணாமலை நகர் காலனி, பெரியகடைவீதி, சுண்ணாம்புகார தெரு, வரகநேரி, பருப்பு கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் அருகில் உள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் இன்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். 

அவசரகால மின் பணிகள் நடக்க இருப்பதால் மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர், சிறுகமணி, கே.சாத்தனூர், மணிகண்டம், பெட்டவாய்த்தலை, அம்மாபேட்டை, அம்பிகாபுரம், திருவரம்பூர், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை, சஞ்சீவி நகர் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF