ரயில்வே துறை தொடர்பாக வரவிருக்கும் திட்டங்களை திருச்சி எம்பி நேரில் ஆய்வு

ரயில்வே துறை தொடர்பாக வரவிருக்கும் திட்டங்களை திருச்சி எம்பி நேரில் ஆய்வு

நான் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இரயில்வே துறை தொடர்பாக வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக இன்று தொடர் ஆய்வுகளை மேற்கொண்டேன்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இரயில்வே லெவல் கிராசிங் இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக, வரவிருக்கும் திட்டங்களுக்கு தேவையான பணிகள் மற்றும் அதில் உள்ள சவால்கள், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, நாளை (23.04.2025) நடைபெறவுள்ள இரயில்வே துறையின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்து, மேம்பாலக் கட்டுமானத் திட்டம் விரைவில் தொடங்கப்படவும், புதிய கோரிக்கைகளை முன்வைப்பதற்காகவும், 

இன்று (22.04.2025) திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டேன்.

ஏற்கனவே ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தும், அதிகாரிகளைத் தொடர்புகொண்டும் ஒப்புதல் பெறப்பட்ட உடையான்பட்டி, பூங்குடி மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய இடங்களில் இரயில்வே கிராசிங் மேம்பாலக் கட்டுமானத் திட்டங்கள் நடைபெற வேண்டிய இடங்களை பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டேன். அங்கு அமையவுள்ள மேம்பாலத் திட்டங்களில் உள்ள சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து, லெவல் கிராசிங் இன்சார்ஜ் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினேன். அந்த இரயில்வே லெவல் கிராசிங் பகுதிகளில் ஏற்படும் நெரிசல், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து விவரங்கள் கேட்டறிந்தேன்.

காலை 11 மணிக்கு உடையான்பட்டி இரயில்வே கிராசிங் மேம்பாலம் அமையவுள்ள பகுதியில் கள ஆய்வைத் தொடங்கி, மதியம் 12 மணியளவில் பூங்குடி பகுதியிலும், மதியம் 1 மணிக்கு இனாம்குளத்தூரில் இரயில்வே இடத்திலும் ஆய்வு மேற்கொண்டேன். இறுதியாக, புதிய கோரிக்கையான ஸ்ரீரங்கம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரப்பட்ட இடத்தில் மதியம் 2 மணியளவில் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுப்புறப் பகுதிகளைப் பார்வையிட்டேன். அப்போது, அங்கு வந்திருந்த இரயில்வே துறை பொறியாளர், சுரங்கப்பாதை அமைப்பது சாத்தியமில்லை என்றும், அதற்குப் பதிலாக சிறிய ரக இரயில்வே மேம்பாலம் (Mini ROB) கட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வுக்குப் பிறகு, பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து வெற்றி பெற்றதையும், தொடர்ந்து இரயில்வே துறை அதிகாரிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து வருவதையும், விரைவில் மேம்பாலங்கள் அமையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தேன். மேலும், திட்டப் பணிகள் தொடங்கும்போது, பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.இந்த நான்கு இரயில்வே மேம்பாலம் திட்டங்களுக்கான ஆய்வில், இரயில்வே துறையின் முதன்மை அதிகாரிகளும், பொறியாளர்களும் உடனிருந்தனர்.

திமுக மாநகர செயலாளரும் மாமன்ற மண்டலக் குழு தலைவருமான மு. மதிவானன், மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு டி.டி.சி. சேரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்பீஸ் முத்துக்குமார், துரை வடிவேல், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பாலுச்சாமி, மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம், தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ. அடைக்கலம், பகுதிச் செயலாளர்கள் ஏர்போர்ட் வினோத், புத்தூர் கோபாலகிருஷ்ணன், ஜங்ஷன் எஸ்.பி. செல்லத்துரை, பொன்மலை எஃப்.எஸ். ஜெயசீலன், ஸ்ரீரங்கம் சி. ராமமூர்த்தி, உறையூர் ஆசிரியர் முருகன், திருவெறும்பூர் சோமு, தெற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டம் தெற்கு ஆரோக்கிய ரெக்ஸ், மணப்பாறை வடக்கு சுப்பிரமணியம், ரயில்வே செழியன், திமுக மாமன்ற உறுப்பினர் மலர்விழி ராஜேந்திரன், திமுக பகுதிச் செயலாளர் மணிவேல், திமுக வார்டு செயலாளர் துரைசாமி, காங்கிரஸ் நிர்வாகி பூங்குடி வீரமுத்து பட்டையார், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் கோபி, திருவானைக்காவல் கோட்டத் தலைவர் தர்மேஷ், பாலாஜி, யோகநாதன், திமுக

 வெங்கட்ராமன், ஆண்டவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேகர், இனாம்குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல்வதூத், திமுக ஊராட்சிச் செயலாளர் மீன் ஷெரீப், கலீல், நஜிம், தமுமுக தாஜூதீன், மறுமலர்ச்சி திமுக தொண்டர் அணி அமைப்பாளர் ராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் அச்சகம் செல்வராஜ், பொ. மனோகரன், இணையதள அணி ஸ்டீபன் சுரேஷ், பூங்குடி சுப்பையா, தன்ராஜ், அனந்தகிரி, ரவி உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision