கல்லூரிகளுக்கு இடையேயான  பால் பேட்மிட்டன் போட்டி- சாம்பியன்ஷிப் வென்ற திருச்சி தேசிய கல்லூரி

கல்லூரிகளுக்கு இடையேயான  பால் பேட்மிட்டன் போட்டி- சாம்பியன்ஷிப் வென்ற திருச்சி தேசிய கல்லூரி

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டியானது  கடந்த 11,12ஆம் தேதி அன்று மன்னார்குடி  STBT பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற ஒன்பது மாவட்டங்களில் இருந்து சுமார் 17 கல்லூரி பெண்கள் அணியினர் பங்கேற்றனர்.


 இப்போட்டியில் திருச்சி  தேசிய கல்லூரி பெண்கள் அணியினர் முதல் இடத்தையும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பெண்கள் அணியினர் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
 தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் விளையாட்டு குழு செயலாளர் ஆர் காளிதாசன் மற்றும் பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்று போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

 திருச்சி தேசிய கல்லூரி மாணவிகள் அணியினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப்  பட்டத்தை வென்றுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

   
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn