சாலை விபத்தில் காயமடைந்தவரிடமிருந்து ரூபாய் 30 ஆயிரத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த திருச்சி ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

சாலை விபத்தில் காயமடைந்தவரிடமிருந்து ரூபாய் 30 ஆயிரத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த திருச்சி ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

திருச்சி மணப்பாறை காந்தி நகரைச் சேர்ந்தவர் ரகுமான் 38. இவர் நேற்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையில் குறுக்கே சென்ற நாய் மீது பைக் மோதியது.

இதனால் சாலையில் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த ரகுமானை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரிடம் 30 ஆயிரம் பணம் இருந்துள்ளதை கண்ட ஆம்புலன்ஸ் டெக்னீசியன் ராஜ்குமார், டிரைவர் ராஜாவிற்கு தெரியவந்தது.

அந்த பணத்தை ரகுமானின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேர்மையுடன் செயல்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81