திருச்சி அருகே பெண் எரித்துக்கொலை:

திருச்சி அருகே பெண் எரித்துக்கொலை:

திருச்சி அருகே பாத்திமா நகரில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் மர்மமான முறையில் பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்துக் கொலை.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது தோட்டம் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ளது. தோட்டத்தில் நெல் பயிரிட்டு இருப்பதால் காலையில் எழுந்தவுடன் தனது தோட்டத்திற்கு சென்று வயல்வெளிகளை பராமரிப்பு பணிகளுக்காக பார்வையிடுவார்.

வழக்கம் போல இன்று காலை 7 மணி அளவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று வயலைச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது வயலுக்கு அருகாமையில் பாதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு பதறி அடித்து அக்கம்பக்கத்தினர் இடம் சொல்ல… அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விராலிமலை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு அந்த பகுதிகளில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றனவா? என்று தேடிப் பார்த்தபோது இரண்டு கேன்கள் கண்டெடுக்கப்பட்டது. அதில் பெட்ரோல் வாங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது அதனால் யாரோ இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.