திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 1.43 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை!!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 1.43 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை!!

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் ரூ1.43  கோடி மதிப்புள்ள கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்து இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

நேற்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலீல் ரகுமான், ரகுமான் காரைக்காலைச் சேர்ந்த மாலினி ஆகிய 3 பயணிகள் தங்கள் உடைமைகளில்  2930 கிராம் எடை கொண்ட ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 

Advertisement

இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.