பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக திருச்சியில் ABVP யினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக திருச்சியில் ABVP யினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் கோவை பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரியும் ABVP திருச்சி மாவட்ட கிளை சார்பாக, நேற்று சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது தடுப்பதற்காக விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் குறிப்பாக ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும், மகளிருக்கான பாதுகாப்பு முறைகளில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று என்றும் ABVP யினர் வலியுறுத்தியுள்ளனர். 

ஆர்பாட்டத்தில் ABVP தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா மற்றும் ABVP திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின், ABVP தென் தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமா சூரியா, மாநகர இணை செயலாளர் சந்தோஷ்குமார் போராட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்வரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட ,மாநகர பொறுப்பாளர்கள், மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn