கஞ்சா போதை ஆசாமிகளால் திருச்சி மாநகராட்சி பள்ளியில் கொள்ளையா?சிதறிய நூலகம்

கஞ்சா போதை ஆசாமிகளால்  திருச்சி மாநகராட்சி பள்ளியில் கொள்ளையா?சிதறிய நூலகம்

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பூட்டி இருந்த கண்ணாடி கதவுகளை உடைப்பு 25 ஆயிரம் ரூபாய் பணம், பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள் திருடு போனதை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பள்ளி செயல்படும் நாட்களில் இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மதுபோதை ஆசாமிகள் பள்ளி முன்புறத்தை பாழ்படுத்தி வந்ததாகவும், கஞ்சா ஆசாமிகள் யாரேனும் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். 

இரண்டு நாட்களுக்கு முன்னதாக கஞ்சா போதையில் பள்ளி வகுப்பறையில் ஒருவர் படுத்து உறங்கி உள்ளார். காலை பள்ளி திறக்கும் பொழுது ஆசிரியர்கள் அவர் எழுப்பி அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டனர். பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision