மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவிட் தடுப்பூசி முகாம் – நீதிபதிகள் துவக்கி வைத்தனர்

மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவிட் தடுப்பூசி முகாம் – நீதிபதிகள் துவக்கி வைத்தனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமினை சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி எஸ்.சோமசுந்தரம், குற்றவியல் நடுவர் சி.கருப்பசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மருத்துவர் பாலாஜி தலைமையிலான மருத்துக்குழு பங்கேற்ற முகாமில் கோவாக்சின்  முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் செலுத்தப்பட்டது.

இதில் மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் என 92 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn