திருச்சியில் நேற்று பெய்த மழையில் நனைந்த நெல் மூட்டைகள் - விவசாயிகள் கவலை

திருச்சியில் நேற்று பெய்த மழையில் நனைந்த நெல் மூட்டைகள் - விவசாயிகள் கவலை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (20.03.2023) மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் நேர அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் கொள்முதல் செய்யும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால், நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படாமல் குவியல் குவியலாக கொட்டி கிடக்கிறது.

அப்படி நெல் மணிகள் கொட்டி கிடந்த நிலையில் நேற்று  திடீரென மாலை  மழை பெய்தால் அவசர அவசரமாக விவசாயிகள் தங்களது நெல்மணிகளை தார்ப்பாய் கொண்டு மூடினார்கள். அப்படி இருந்தும் அந்தப் பகுதியில் பெய்த மழை தண்ணீர் வடிவதற்கு வழியில்லாமல் அரசு நெல் கொள்முதல் நிலையம் பகுதியில் தேங்கியது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

எனவே அரசு ஆசூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள பல ஆயிரக்கணக்கான மூட்டைகள் அளவு உள்ள நெல்மணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn