திருச்சியில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாள் திமுக சார்பில் நினைவிடத்தில் நேரில் மரியாதை

திருச்சியில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாள் திமுக சார்பில் நினைவிடத்தில் நேரில்  மரியாதை

திருச்சியில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாவை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தென்னூர் உழவர் சந்தையிலுள்ள தியாகிகளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம், உள்ளிட்ட 5 பேர் உயிர் நீத்தனர்.இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில்  திமுகவினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகரச் செயலாளர் அன்பழகன். சட்டமன்ற உறுப்பினர்கள் செளவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தொண்டர் அணி,மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn