திருச்சி அருகே தக்காளி - ஆப்பிள் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி

திருச்சி அருகே தக்காளி - ஆப்பிள் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி

கரூரில் இருந்து திருச்சிக்கு தக்காளிப்பழம் ஏற்றிச்சென்ற வேனும், திருச்சியில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு ஆப்பிள் பழங்களை ஏற்றிவந்த வேணும் திருச்சி பெட்டவாய்தலை அருகே சிறுமணி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கோபிசெட்டிபாளையம் அக்கறை கொடி நெறியைச் சேர்ந்த நவீன் (22) ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதே வேனில் வந்த இருவர் லேசான காயத்துடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் தக்காளி பழம் ஏற்றி வந்த வேன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டர். இத விபத்து குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn