வீரமலைப்பாளையத்தில் நாளை முதல் ஏப்.10 வரை துப்பாக்கி சுடும் பயிற்சி

வீரமலைப்பாளையத்தில் நாளை முதல் ஏப்.10 வரை துப்பாக்கி சுடும் பயிற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு நாளை (06.04.2022) முதல் (10.04.2022)-ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7.00 முதல் 10.00 மணி வரையிலும் இந்தோ- திபெத்திய எல்லைக்காவல் படையினரால் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, இந்த நாட்களில் அப்பயிற்சி தளத்தில் கால் நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதோ, மனித நடமாட்டமோ இருக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO