திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கு கதவு உடைப்பு - பத்திரிகையாளருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம்

திருச்சி மாநகராட்சி  கூட்ட அரங்கு கதவு உடைப்பு - பத்திரிகையாளருக்கும் திமுகவினருக்கும்  இடையே வாக்குவாதம்

திருச்சி மாநகராட்சி துணை மேயர் வேட்பு மனு தாக்கலை படம் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தடுத்து நிறுத்திய மாநகராட்சி ஊழியர்கள். திமுகவினர் அதிக அளவில் உள்ள கூட்டமாக இருந்ததால் புகைப்படக் கலைஞர் ஒருவர் மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டபோது அவர் ஒருமையில் பேசி வெளியேறச் சொன்னதால் உடனடியாக பத்திரிகையாளர்களுக்கும் திமுகவினருக்கு மாநகராட்சி ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .முன்னதாக கூட்ட நெரிசலில் (திமுகவினரால்) மாமன்ற கூட்டம் கதவு உடைக்கப்பட்டது.

முன்னதாக திருச்சி மாநகராட்சி துணை மேயராக வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி திவ்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் திருச்சி 33வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO