இருசக்கர வாகனம் திருடியவர் கைது 6 வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனம் திருடியவர் கைது 6 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு மருத்துவமனை, காய்கறி மார்கெட், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருச்சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.

இதில், மருங்காபுரி ஒன்றியம் ஊத்துக்குளி வடக்குத்தெருவில் வசித்து வரும் செல்வகுமார் மகன் கார்த்திகேயன்(24) இருச்சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை கார்த்திகேயனை கைது செய்த மணப்பாறை போலீஸார், அவனிடமிருந்து 6 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கார்த்திகேயன் சிறையிலடைக்கப்பட்டான். கார்த்திகேயன் மீது விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய காவல்நிலையங்களில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO