திருச்சி ராணுவ அங்காடியில தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி ராணுவ அங்காடியில தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள மேஜர் சரவணன் சாலையில் ராணுவ பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு மதுபானங்கள் மிக்சி கிரைண்டர் மின்விசிறி மற்றும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. ஓய்வு பெற்ற ராணுவத்தினர் மாதந்தோறும் தங்களுக்கு தேவையான பொருட்களை அடையாள அட்டை காண்பித்து வாங்கி செல்வார்கள் .

இந்நிலையில்  அங்காடியில் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது  இதில் தீ வேகமாக பரவி பொருட்கள் எரிய தொடங்கின. இதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணிகள் ஈடுபட்டனர். இந்த பல்பொருள் அங்காடி அருகே புத்தகத் திருவிழா மைதானத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதற்குள் அங்காடியிலிருந்த இருந்த பல பொருள்கள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவம் குறித்த கண்டன்மென்ட் போலீசார் விசாரணை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO