முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம்

துறையூர் அருகே உப்பிலியபுரம் அண்ணா சிலை அருகே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா பங்கேற்பு.திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிலியபுரம் அண்ணாசிலை பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு உப்புலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், உப்புலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண்நேரு, திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏ தியாகராஜன், திருச்சி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்மாறன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஆகியோர்கள் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சிறப்பு உரையாற்றினார்கள், பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு பேசுகையில் 

பாஜகவில் இருக்கிற மன நோயாளிகளான எச் ராஜா போன்று இருக்கிறவர்கள் என்ன சொன்னார் நாங்கள் ஜோசியம் பார்த்தோம் சோலி உருட்டினோம் சூனியம் கூட வைத்தோம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார் முதலமைச்சர் ஆகி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹச் ராஜா சொன்னார் தி ஸ்டாலின் இஸ் தி மோஸ்ட் டேஞ்சரஸ் கருணாநிதி என சொன்னார், ஸ்டாலின் கலைஞரை விட மோசமானவர் நம்மளை சுண்ணாம்பு தடவாமல் விடமாட்டார் என ஒத்துக் கொண்டு இன்று அடக்கி வாசிக்கிறார்களே, இந்த மாநிலம் பாதுகாப்பாக மாநிலமாக இந்த மாநிலம் சமூக நல்லிணக்கத்திற்காக இந்த மாநிலம் சாதிய அடக்குமுறைகளுக்கெதிராக ஜனநாயகத்தை பாதுகாத்திட ஒரு மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு தமிழக முதல்வர் காரணம், நாங்கள் சொன்னோம் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக சுக்கு நூறாகிவிடும் என்று சொன்னோம், 

தற்போது திருப்பூரில் அதிமுக காரன் நோட்டிஸில் என்ன போட்டு இருக்கான் தெரியுமா கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்களுக்கு குலுக்கல் முறையில் இரண்டு டிவி மூன்று சைக்கிள் 4 பம்பு தருகிறோம் என்று கூறி குலுக்கல் முறையில் ஆட்களை சேர்க்கும் அளவிற்கு அதிமுக சென்று உள்ளது என கூறினார், உத்திரபிரதேசத்தில் எம்எல்ஏக்கள் பான்பராக்கை போட்டு தூப்புகுகின்றனர், எங்கள் வீட்டுக் குழந்தைகள் பார்லிமெண்டில் ஆங்கிலத்தில் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று குற்றச்சாட்டு. 

உலக நாடுகளுக்கு எல்லாம் சென்றீர்கள் அங்கு இந்தியா பேசினர்கள்?அமெரிக்காவிற்கு மோடி சென்றார் ட்ரம்ப் ஆங்கிலத்தில் பேசுகிறார், நம்ம ஆளு மூன்று ட்ரான்ஸ்லேட்டர் வைத்து முழிக்கிறார்!ஹிந்தியில் பேசுகிறார் அமெரிகாவில் யாருக்குத் தெரியும் ஹிந்தி? நாங்கள் இங்கிலீஷில் பேசுகிறோம் அதற்கு புரிந்து கொண்டு கை கொடுத்து உறவாடும் அளவிற்கு எங்கள் பிள்ளைகள் இருப்பதாக பேசினார், தொடர்ந்து கூட்டத்தில் உப்பிலியபுரம் ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர் மற்றும் கழக முன்னோடிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக அனைவரும் திமுக செயல்பாடுகள் குறித்த உறுதிமொழி எடுத்தனர்..

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision