வெடித்தது திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:

வெடித்தது திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்துசெய்ய நாடு முழுவதும் போராட்டம் வெடித்து கொண்டிருக்கும் நிலையில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக திருச்சி பாலக்கரையில் கடை அடைப்பு போராட்டமும், அதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் போராட்டமும் நடத்தப்பட்ட நிலையில் இப்போது பெரும் திரளான மக்கள் கூடி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசே! மத்திய அரசே! இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி வருகின்றன. இதில் திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய சங்கங்களும் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரூஹீல் ஹக், ஹாஜி கே.நவாஸ் கனி, ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், திருச்சி காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரைகளை எழுப்பினர்.