திருச்சி தெற்கு உக்கடை பவளம் நகர் சாலையை சீரமைத்திட மாநகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

திருச்சி தெற்கு உக்கடை பவளம் நகர் சாலையை சீரமைத்திட மாநகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

அரியமங்கலம் தெற்கு உக்கடை பவளம் நகர்  சாலை வசதியானது மழையின் காரணமாக மிகவும் மோசமான சூழ்நிலையில் சிதைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர வழி இல்லாமல் சாலை ஆனது நீர்த்தேக்கத் உடன் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாக ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதி வாசிகள். 

மேலும் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமிகளும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் பணம் வசூலித்து ஒரு மண் சாலை அமைத்து உள்ளனர்

 மழை காரணமாக தற்போது சேதம் அடைந்துள்ள சாலையை சரிசெய்ய உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.