ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை முதல் திருப்பி தரப்படும் - திருச்சி மாநகர காவல்துறை

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை முதல் திருப்பி தரப்படும் - திருச்சி மாநகர காவல்துறை

ஊரடங்கு உத்தரவை மீறி திருச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்த நபர்களிடம் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 5ம் தேதி (05/06/2021) வரை திருச்சி மாநகரில் 6610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 73 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 6871 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் திருச்சி மாவட்டம் கே.கே நகர் பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 15 நாட்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நாளை முதல் தேதி வாரியாக தினம் தோறும் 250 வாகனங்கள் விடுவிக் கப்பட உள்ளது என திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve