திருச்சியில் அரசு ஊழியர்கள் 7வது நாளாக பிணம் போல் சித்தரித்து நூதன முறையில் போராட்டம்!!

திருச்சியில் அரசு ஊழியர்கள் 7வது நாளாக பிணம் போல் சித்தரித்து நூதன முறையில் போராட்டம்!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர்களின் 7வது நாள் போராட்டம் - போராட்டத்தில் ஒருவரை பிணம்போல் போல் சித்தரித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Advertisement

அகவிலைப்படி சரண்டர் தொகையை வழங்க வேண்டும்,கொரோனா நோய் தொற்று காலத்தில் இறந்த அரசு ஊழியர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என 7-வது நாளாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - அந்த வகையில் இன்று அரசு ஊழியர் ஒருவரை பிணம் போல் சித்தரித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Advertisement

இதனை காவல்துறையினர் தடுத்தபோது காவல் துறையினருக்கும்,

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.